×

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: 12 தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் 7,19,196 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3,93,890 மாணவிகளும், 3,25,305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட 4.07 சதவீதம் மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தியில், தமிழ்நாட்டில் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் நீங்கள், உயர்கல்விப் படிப்பிலும் சிறந்து விளங்கி, தங்கள் பெற்றோருக்கும் நாட்டிற்கும் நற்பெருமை சேர்க்கும் விதத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிய எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்பு மாணவ கண்மணிகளே..! பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று மேற்கொண்டு கல்லூரி படிப்பில் கால் பதிக்க இருக்கும் தமிழகத்தின் மாணவ செல்வங்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். தேர்வில் வெற்றி பெற இயலாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் மீண்டும் நன்கு படித்து அடுத்து வரும் மறுதேர்வில் தேர்ச்சி பெற எனது பாராட்டுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவச் செல்வங்களுக்கு எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisami ,Murugan ,Chennai ,Secretary General ,Edappadi Palanisami ,Tamil Nadu ,
× RELATED உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்;...